सामग्री पर जाएँ

पृष्ठम्:शिवार्चनाचन्द्रिका.djvu/५

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

________________

சிவமயம். முகவுரை சிவபெருமானிடத்திடையறாத அன்புஞ் செல்வமும் உடைய பண்டித மணிகளே! இவ்வுலகமானது சுமார் நானூறு வருடங்கட்கு முன்னர் புற மதங்களால் சைவசமய விளக்கம் சிறிது குன்றி, அதனால் சைவ சாத்திரங்களும் விளக்கமுராமலிருந்தமையின், அக்குறையை நீக்கிச் சைவசமயத்தையும், சைவசாத்திரங்களையும் விளக்கமுறச் செய்யத் திருவுளங்கொண்டு, ஸ்ரீகண்டபரமேசுவார், தொண்டை நாட்டி னுள் காஞ்சீபுரத்திற்குச் சமீபத்திலுள்ள அடையப்பலம் என்னும் சிற்றூரில், எட்டு மகாயாகங்கள் செய்தவராயும் தன்னுடைய ஒழுக் கத்தினால் வேதாகமங்களைப் பிரயோசனமாகச் செய்யப்பெற்றவ ராயும் உள்ள ஆசாரிய தீசதிதரவர்களின் புத்திரர் இரங்கராஜ தீக்ஷித ரவர்களுக்குப் புத்திரராக அப்பய தீக்ஷிதர் என்னும் திருகாமத்துடன் அவதாரஞ் செய்தருளினர் என்பது யாவரும் அறிந்த விஷயமே. ஸ்ரீமத் திசுத்தரவர்களுடைய அவதாரத்தில் நிகழ்ந்த சரிதங்கள் பதஞ்சலி முனிவர் முதலியவர்களாலுஞ் சொல்லுதல் அரிது. ஆயி னும், பண்டிதமணிகள் சிலர் ஆங்காங்கு சிறிது சிறிது கூறியுள் ளார்கள். ஆதலின் அது விஷயத்தில் நான் உபசாந்தியடைகிறேன். ஸ்ரீமத் நீசபிப்ரவர்கள் தமக்கபி டானியாயுள்ள வேலூர் சின்ன பொம்மமகாராஜாவின் பிரார்த்தனையை அனுசரித்தும், தன்னுடைய அவதாரத்தின் பயனை உலகிறதபகரிக்கக்கருதியும், அவ்வப்பொழுது கனவில் சிவபெருமானால் உத்திரவு செய்யப்பெற்று, நான்கு சாஸ்தி ரங்களின் சம்பந்தமான கிரந்தங்களைச் செய்து வருகின்ற லீலையின் நடுவில், இல தவில் முத்தியைத்தருதற்கு உபாயமான சைவக்கிரந்தங் கள் பலவற்றையுஞ் செய்தருளினர். அவற்றுள், ஆன்மார்த்த பூசை யைத் தெரிவிக்கக்கூடியதாயும், சித்தாந்தமென்னுஞ் சிவாகமங்களை அனுசரித்ததாயும் உள்ள சிவார்ச்சனா சந்திரிகை என்பதும் ஒன்று. இது ஸ்ரீமத் திரிதரவர்களாலேயே செய்யப்பெற்றதென்பது, இச்சிவார்ச்சனா சந்திரிகையின் இறுதியிலுள்ள வேலூரதீச என் றற் றொடக்கத்துச் சுலோகத்தாலினிது விளங்கும் இன்னும் ஸ்ரீமத் தீக்ஷிதரவர்களே தாம் செய்தருளிய கிரந்தங்களின் பெயர் களைக் கூறுமிடத்து நான்கு சாத்திர சம்மந்தமான கிரந்தங்களைக்