सामग्री पर जाएँ

पृष्ठम्:शिवार्चनाचन्द्रिका.djvu/६

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

________________

கூறிவிட்டு, சைவசாத்திர கிரந்தங்களைக் கூரப்புகுந்து, ஸ்ரீகண்ட பாஷிய வியாக்கியான்மாகிய சிவார்க்கமணி தீபிகை, சிவானந்தலகரி என்னும் ஆனந்தலகரி, சிவாத்வைதவிநிர்ணயம் , இரத்தினத்திரய பரீக்ஷை, பஞ்சரத்தினஸ்தவம், சிகாணிமாலை, பிரம்மதர்க்கஸ்தவம், சிவதத்துவவிவேகம், சிவகர்ணாமிர்தம். சிவார்ச்சனாசந்திரிகை, இதன் வியாக்யானமான பாலசந்திரிகை , என்பன வாதியாக கூறியிருக் கின்றமையாலும் விளங்கும். இந்தக் கிரந்தம் இதுகாறும் அச்சுக்குவராமலிருந்தது. அத னால் இதன்கண் உள்ள அருமையான விஷயங்களைப் பலரும் அறிந்தனுபவிக்காக்குறையை நிவர்த்திக்கக்கருதி பரோபகார்சீலர்களா யும் சிவபத்தசிரோமணிகளாயும், பிரபுக்களாயுமுள்ள தேவகோட்டை வாசிகளான தனவைசியர்கள், சிவாகமங்களின் ஜீரணோத்தாரணத் தின் பொருட்டு, சிவாகமசித்தாந்தபரிபாலன சங்கம் ஒன்று நிருவி, அதில் அக்கிராசனாதிபதி, உபஅக்கிராசனாதிபதி, காரியதரிசி, போஷகர், ஆகமார்ச்சகர் முதலிய அங்கத்தினர்களாக இருந்து சிவாகமங்களை அச்சிட்டுதவுதற்கு மங்கலமாய், முதலாவதாக இக் நூலை பண்டிதர்களாற் சோதித்து அச்சிட்டு உதவியிருக்கின் றனர். இன்னும், அஷ்டப்பிரகரணம் , சித்தாந்தசேகரம், பௌட்கா விருத்தி, மிருகேத்திர விருத்திகளையும், மூலாகமங்களையும் அச்சிட் டுதவதற்கு வேண்டும் பிரபல முயற்சிகள் செய்து வருகின்றனர். பிரதி உதவினவர்கள். சிவாகமங்களை அச்சிட்டு உபகரிக்கவேண்டுமென்ற பெரு நோக்கமுடைய கண்டதேவி ஸ்ரீலஸ்ரீ காளீசுவாசிவாசாரியாவர்கள். இவர்கள் பிரதிதான் முதலாவதாகக்கிடைத்தது. பின்னர் சோதிப்பதற் காகக்காளையார்கோவில் ஸ்ரீலஸ்ரீ பெரிய காளீசுவரசிவாசாரியரவர் களும், மது ராந்தகம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய சிவாசாரியரவர்களும், கும்பகோணம் சப்ரிஜிஸ்டர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணசாமி சாஸ்திரிகள வர்களும் தங்களிடத்திலுள்ள பிரதிகளை உதவினர். இப்பெரியாரனை வருக்கும் இச்சங்கத்தார் மனமார்ந்த வந்தனத்தை நன்றியறி தலின் அறிகுறியாக அன்புடன் செலுத்துகின்றனர். இங்ஙனம் அழ. அரு . ராம. அருணாசலஞ் செட்டியார். சிவாகமசித்தாந் தபரிபாலன தேவகோட்டை ஜமீந்தார். சங்கம், கோட்டை. ஆகமார்ச்சகர்,